Wednesday, February 9, 2011

ஆகமவிதி

கோயில் . . தீர்ப்பு : படிக்க முடியாவிட்டாலும் சேமிப்பில் வைங்க. தேவைப்படும்.*
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.indiaenvironmentportal.org.in/files/file/heritage-monuments-Madras-HC-order-June7-2021.pdf&ved=2ahUKEwiqtMbP0OryAhXC6XMBHQBMDMcQFnoECAQQAQ&usg=AOvVaw1PUWVpKJVBbMEwcZDxC6Zv
 சுண்டெலிகளை இப்போது காணோமே !
எங்கே போயின ???...

அனைவரும் அச்ச்சகர் ஆகலாம்,
பெண்களையும் மாதவிடாய் காலத்திலும் அர்ச்சகர் களாக ஆகலாம். இதுவே எங்கள் அமைப்பின் நீண்ட கால கொள்கை என்றெல்லாம் கீச்சிட்ட தி.க சுண்டெலி களையும், அதற்கு ஜால்ரா வாசித்த RSS பலே பெருச்சாளி களையும் காணவே இல்லை.

இதற்கு காரணம் என்ன என்பதை கொஞ்சமாவது சிந்தித்தீர்களா ??

அரசியல் சாசன மத உட்பிரிவு, மத சுதந்திர ஷரத்துகளின் படி ஆகமக் கோயில்களில் அந்தந்த ஆகமங்களின் படிதான் அர்ச்சகர்களை நியமனம் செய்ய முடியும் என்பதை அறிவீர்களா ?.

In Seshammal v. State of T.N., [(1972) 2 SCC 11], வழக்கின் தீர்ப்பின் படி அந்தந்த மத பிரிவின் படி மத நூலின் படிதான் அர்சகர்களின் நியமனம் உள்ளிட்ட அனைத்து மதம் சம்பந்தப்பட்ட காரியங்களையும் செய்ய சுதந்திரம் உள்ளது. 

உதாரணத்திற்கு சைவ ஆகமப்படி உள்ள கோயில்களில் சைவ ஆகமத்தில் உள்ள படி மட்டுமே அரசகர்கள் நியமிக்கப்பட முடியும். 

அதே போல் வைணவ ஆகமக் கோயில்களில் வைணவ ஆகமங்களான பாஞ்சராத்திரம் மற்றும் வைகாணச ஆகமங்களின் படி மட்டுமே அர்ச்சகர்கள் நியமனம் செய்ய முடியும். 

கொளமார கோயில்களில் வாதுள ஆகமம், குமார தந்திரம் முதலான ஆகமங்களின் படியே அர்ச்சர்களை நியமனம் செய்ய முடியும். 

மேற்கண்ட இந்த மூன்று ஆகமங்களைதான் அந்தணர்களும், ஆதிசைவர்களும் அர்ச்சகர்களாக உள்ளனர்.

சாக்த கோயில்களில் கெளல சாக்த ஆகமங்களின் படி மட்டுமே அர்ச்சகர்கள் நியமனம் செய்ய முடியும். பலி பூஜைகள் உள்ள இந்த கோயில்களில் அந்தணர் அல்லாத ஆண்டி, பண்டாரம் முதலான ஜாதியினரே பூசாரிகளாக இருக்க முடியும் என்பதே சாக்த ஆகமம்.

இதே போல் கிராம தேவதைகளின் ஆகமமான பூத தந்திரத்தின் படியே அர்ச்சகர்களை நியமனம் செய்ய முடியும். 

விஷக்கடி பாடம் போடும் கோயில்களில் காருட ஆகமத்தின் படியே அர்சகர்களை நியமனம் செய்ய முடியும். இதே போல் வைதீக கோயில்களில் வேதத்தின் படியும், பாசுபதக் கோயில்களில் பாசுபத ஆகமங்களின் படியும், லாகுள கோயில்களில் லாகுள தந்திரங்களின் படியும், காபாளீக கோயில்களில் ரௌவ்ரவ ஆகமம் முதலிய பைரவ ஆகமங்களின் படியுமே அர்சகர்களை நியமனம் செய்ய முடியும். 

கன்னியாகுமரியில் உள்ள கேரள முறை கோயில்களில் தந்திர சமுச்சய முறைப்படியே அர்சகர்கள் நியமனம் செய்ய முடியும். 

தமிழகத்தில் பெளத்த ஆகமங்களின் படி உள்ள ஹீனயான தேரவாத பெளத்தம் எனப்படும் பெளத்த விஹாரங்கள் தற்போது ஒன்றும் இல்லை. 

தமிழகத்தில் திகம்பர ஆகமம் எனப்படும் சமணத்தில் ஜைன ஆகமங்கள் முறைப்படியே அறநிலையத்துறை வசம் உள்ள சில சமணப் பள்ளிகளில் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும்.

எனவே மன்னர்கள் காலத்தில் இருந்து தற்போது இருக்கும் பாரம்பரிய கோயில்கள் அனைத்துமே மேற் கண்ட வெவ்வேறு ஆகமங்களின் படி அமைந்து உள்ளதால் ஆகமம் இல்லாத பாரம்பரிய கோயிலே இல்லை.

புதிதாக கோயில் கட்டி வேண்டு மானால் அனைவரும் அர்ச்சகர் ஆகிக் கொள்ளலாம். 

 தங்களது ஷிவ ராத்திரி ஈஷா, இஸ்க்கான், நித்யானந்தா கைலாசா, சிவசங்கர் பாபா, பலே புது புது
சாய்பாபாக்கள், மேல் மருவத்தூர், பாரத மாதா, தமிழ்த் தாய்,தெலுங்கு தல்லி, கன்னட மாதே, காந்தி கோயில்,கோவை கொரோனா கோயில், சினிமா நடிகை குஷ்பூ கோயில்,ஆழியாறு மனவளக்கலை அறிவு திருக்கோயில்,பொள்ளாச்சி . . . கூட்ட
வள்ளலார் மடம் போன்றவர்களும்,பிரம்மகுமாரி கோயில்,கல்கி பகவான் கோயில்,ஓஷோ கோயில்,பேரூர் கர்நாடக லிங்காயத் ஆதீனம், 
அய்யா வழி போன்ற இடங்களில் அவர் அவர் விருப்பப்படி சொந்தக் காசில் எப்படியேனும் யாரையேனும் வைத்து டான்ஸ் ஆட முடியும். 

வேத ஆகமக் கடவுள்களுக்கு தங்கள் சொந்த காசில், சொந்த இடத்தில் தனியார் கோயில்கள் கட்டி உள்ள ரவிசங்கர் பாபா, வேலூர் நாராயணி பாபா தங்கள் இஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆக்கிக் கொள்ளலாம்.

எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசியல் சாசனப்படி எதற்குமே செல்லாத குப்பை வாக்குறுதிகளை நம்பி பாரம்பரிய கோயில்களில் நுழைந்து விடலாம் என்று நினைத்தால் அருமைச் செல்லங்கள் கீழ்கண்ட வழக்கு தீர்ப்புகளை படித்துக் கொள்ளவும்.

Suo Motu W.P.No.574 of 2015 and WP(MD).No.24178 of 2018

36.2.4 It is also contended by the learned Senior Counsel that the appointment of Archakas has to be made without following the hereditary order, however in accordance with the Agamas and any deviation of the said age old custom and usage would be an infringement of a freedom of religion and the right of religious denominations to manage its own affairs as guaranteed by Articles 25 and 26 of the Constitution. To substantiate the same, he relied upon the judgments of the Supreme Court in Adi Saiva Sivachariyargal Nala Sangam [(2016) 2 SCC 725] and Seshammal v. State of Tamil Nadu [(1972) 2 SCC 11].

46. In Seshammal v. State of T.N., [(1972) 2 SCC 11], the Supreme Court, while dealing with the validity of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowment Act, laid down the importance of the Agamas, the relevant portion of which is extracted hereunder: “12.The Agamas have also rules with regard to the Archakas. In Saivite temples only a devotee of Siva, and there too, one belonging to a particular denomination or group or sub-group is entitled to be the Archaka. If he is a Saivite, he cannot possibly be an Archaka in a Vaishnavite Agama temple to whatever caste he may belong and however learned he may be. Similarly, a VaishnaviteArchaka has no place as an Archaka in a Saivite temple. Indeed there is no bar to a Saivite worshipping in a Vaishnavite temple as a lay worshipper or vice versa. What the Agamas prohibit is his appointment as an Archaka in a temple of a different denomination. Dr.Kane has quoted the Brahmapurana on the topic of Punah-pratistha (Re-consecration of images in temples) at p.904 of his History of Dharmasastra referred to above. The Brahmapurana says that “when an image is broken into two or is reduced to particles, is burnt, is removed from its pedestal, is insulted, has ceased to be worshipped, is touched by beasts like donkeys or falls on impure ground or is worshipped with mantras of other deities or is rendered impure by the touch of outcastes and the like — in these ten contingencies, God ceases to indwell therein”. The Agamas appear to be more severe in this respect. Shri R.Parthasarathy Bhattacharya, whose authority on Agama literature is unquestioned, has filed his affidavit in Writ Petition No. 442 of 1971 and stated in his affidavit, with special reference to the Vaikhanasa Sutra to which he belongs, that according to the texts of the Vaikhanasa Shastra (Agama), persons who are the followers of the four Rishi traditions of Bhrigu, Atri, Marichi and Kasyapa and born of Vaikhanasa parents are alone competent to do puja in Vaikhanasa temples of Vaishnavites. They only can touch the idols and perform the ceremonies and rituals. None others, however, high placed in society as pontiffs or Acharyas, or even other Brahmins could touch the idol, do puja or even enter the GarbhaGriha. Not even a person belonging to another Agama is competent to do puja in Vaikhanasa temples. That is the general rule with regard to all these sectarian denominational temples. It is, therefore, manifest that the Archaka of such a temple besides being proficient in the rituals appropriate to the worship of the particular deity, must also belong, according to the Agamas, to a particular denomination. An Archaka of a different denomination is supposed to defile the image by his touch and since it is of the essence of the religious faith of all worshippers that there should be no pollution or defilement of the image under any circumstance, the Archaka undoubtedly occupies an important place in the matter of temple worship. Any State action which permits the defilement or pollution of the image by the touch of an Archaka not authorised by the Agamas would violently interfere with the religious faith and practices of the Hindu worshipper in a vital respect, and would, therefore, be prima facie invalid under Article 25(1) of the Constitution.”

47. In Adhi Saiva Sivachariyargal Nala Sangam v. State of Tamil Nadu [2016 (2) SCC 725], the Supreme Court further clarified the legal position with respect to the appointment of Archakas, which reads as follows: “It is the considered view of the court that the validity or otherwise of the impugned G.O. would depend on the facts of each case of appointment. What is found and held to be prescribed by one particular or a set of Agamas for a solitary or a group of temples, as may be, would be determinative of the issue. In this regard it will be necessary to re-emphasis what has been already stated with regard to the purport and effect of Article 16(5) of the Constitution, namely, that the exclusion of some and inclusion of a particular segment or denomination for appointment as Archakas would not violate 14 Article so long such inclusion/exclusion is not based on the criteria of caste, birth or any other constitutionally unacceptable parameter. So long as the prescription(s) under a particular Agama or Agamas is not contrary to any constitutional mandate as discussed above, the impugned G.O. dated 23.05.2006 by its blanket fiat to the effect that, “Any person who is a Hindu and possessing the requisite qualification and training can be appointed as a Archaka in Hindu temples” has the potential of falling foul of the dictum laid down in Seshammal (supra). A determination of the contours of a claimed custom or usage would be imperative and it is in that light that the validity of the impugned G.O. dated 23.05.2006 will have to be decided in each case of appointment of Archakas whenever and wherever the issue is raised.”

இதனை தற்போது வந்து உள்ள ஹெரிடேஜ் கன்சர்வேஷன் சொசைட்டி ரிட் பெட்டிசன் 574 of 2015 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் மாண்புமிகு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு தங்களது தீர்ப்பின் குறிப்புகளில் சுட்டிக் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்பு முனையான தீர்ப்பு குறித்த 
அதில் நீதிபதிகள் கோயில், மதம் பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளுக்கும் தனி தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க உத்தரவிட்டு உள்ளனர். 

சங்கி மங்கி சுண்டெலிகள் ஏதாவது சேட்டை செய்தால் சட்டப் படி இந்த தீர்ப்பாயத்தில் வைத்து கதை முடிக்கப்படலாம். 

எலிகள் ஏன் தீடீர் என ஓடுகின்றன என்பதை அறிவீர்களா ?... 

கடந்த சில நாட்களாக தீண்டாமையை ஒழிக்க தாழ்த்தப் பட்டவர்களையும் அர்ச்சகர்கள் ஆக்குவோம்.
தாழ்த்தப்பட்ட பெண்களையும் கோயில் அர்ச்சகர் ஆக்குவோம் என்றும் எல்லாரும்
 ஒரே குரலில் சிலிர்ப்பதன் பின்னணி என்ன தெரியுமா ?? 

கடந்த சில நாட்களுக்கு முன் மல்லிகா சீனிவாசனுக்கு பொதுத்துறை நிறுவனங்களின் தேர்தல் குழுவின் சேர்மனாக மத்திய அரசு நியமித்தது.

தமிழக அரசு மல்லிகா சீனிவாசனை தமிழ்நாடு மாநில வளர்ச்சி பொறுப்பாளர்களில் ஒருவராக அமர்த்தியது.

பார்ப்பான் என்றால் ஆகாது என்று எப்படிTVS குடும்பத்திற்கு பதவிகளை வாரி வழங்குகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் மத்திய, மாநில அரசுகள் ஒரே நேரத்தில் இந்த முக்கிய பதவிகளை வாரி வழங்குவது ஏன் என்பதை கொஞ்சம் கூட யாரும் கொரோனா காலத்தில் சிந்திக்கவில்லை.

தமிழகத்தில் உள்ள கோயில்களைப் பற்றியும் அவற்றை சரி செய்ய வேண்டிய அவசர சீர்திருத்தங்கள் பற்றியும் ஆழமாக ஆய்வு செய்து Heritage Conservation Society ஸ்ரீகுமார் அவர்கள் மூலம் பொன்.தீபங்கர் குழுவினர் ஆலோசனையில் கோயில் சீர்திருத்தங்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு ரிட் பெட்டிஷன் 574 மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரப் போகிறது என்பதை அறிந்துதான் பொன் மாணிக்கவேலை ரவுண்டு கட்டியது போல அர்ச்சகர் களுக்குள் ஜாதி பிரச்சனையை உருவாக்கி Divide & Rule வேலையை செய்யத் தொடங்கி உள்ளனர்

இந்த நிலையில் சிலை கடத்தல் கும்பல் மற்றும் அதன் சிண்டிகேட் கட்சிகள் பயந்தது போலவே கோயில்களுக்கான நல்ல தீர்ப்பினை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அவர்களின் அமர்வு 78 வரைமுறகளோடு வழங்கி உள்ளது. 

பந்தநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் தொடர்ந்த வழக்கின் மூலம் பொன்.மாணிக்கவேல் அவர்கள் செய்த மிகப் பெரிய சிலை மீட்பு புரட்சிக்கு ஆணை இட்டவர்கள் இந்த அமர்வு மாண்புமிகு நீதிபதிகள்தான் காரணம்.

தற்போது வந்து உள்ள தீர்ப்பின் சில அம்சங்கள்:

🔥 17 உறுப்பினர்களைக் கொண்ட Heritage Commission என்ற பாரம்பரிய பாதுகாப்பு ஆணையம் ஒன்றை எட்டு வாரங்களுக்குள் தொல்லியல் வல்லுனர்களைக் கொண்டு அமைக்க வேண்டும்.

இது தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள்,தொல் பொருட்கள், பழைய கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

🔥 மாமல்லபுரத்தில் தனி வாரியம் அமைத்து தமிழகத்திலேயே முதல் கற்கோயில்களான மாமல்லபுரம் கற்கோயில்களை எட்டு வாரங்களுக்குள் காக்க வேண்டும்.

🔥 தமிழக அரசு இந்த ஹெரிடேஜ் கமிஷன் அல்லாமல் மாநிலம், மாவட்ட அளவுகளில் வல்லுனர் குழுக்களை எட்டு வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

🔥 தொல்லியல் மற்றும் மாமல்லபுரம் ஆகியவை சம்மந்தமாக தெளிவான கையேடு ஒன்றை 12 வாரங்களுக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

🔥 மத்திய தொல்பொருள் துறை தமிழகம் முழுவதும் உள்ள 100 வருடத்திற்கு மேற்பட்ட அனைத்து கோயில்களின் நிலமைகளைப் பற்றி 6 முதல் 12 மாத காலகட்டத்துக்குள் கணக்கிட்டு சென்னை தொல்லியல் வட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

தொல்பொருள் துறை இதை வைத்தே அனைத்து கோயில்களையும் தரம் பிரிக்க வேண்டும்.

🔥 Comptroller and Audit General தொல்லியல் துறை உதவியுடன் தமிழகத்தில் செய்யப்பட்டு உள்ள கோயில் சேதங்களையும் அதன் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் வருடம் ஒரு முறை தமிழக கோயில்களில் ஆய்வு நடத்த வேண்டும்.

🔥 100 வருடம் பழமையான கோயில்கள் அனைத்தையும் ஒரு பழமையான சிலை இருந்தால் கூட தொல் பொருள் சின்னமாக மத்திய தொல்லியல் துறை அறிவித்து வருடம் ஒரு முறை ஆய்வு செய்யவும் வேண்டும்.

🔥 கோயில் பணத்தை அந்தந்த கோயில்களுக்கு மட்டுமே இனி பயன் படுத்தப்பட வேண்டும்.

🔥 அர்ச்சகர்கள்,ஓதுவார்கள்,இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட கோயில் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் சலுகைகள் கோயில் வருமானத்தில் இருந்து தெலுங்கானா மாநில அரசு போலவே வழங்க வேண்டும். மற்றும் இவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட வேண்டும்.

🔥 ஓதுவார், திவ்வியபிரபந்த பட்டர்கள் பணியிடம் நிரப்பப் படாமல் உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

🔥 கோயில் நிலங்களாக ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் தமிழகத்தில் நிலங்கள் உள்ளது. இவற்றை பொது நோக்கம் என்ற நோக்கில் அரசாங்கம் கபளீகரம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

🔥 கோயில் சொத்துகளில் அமர்ந்து கொண்டு ஏமாற்றுபவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

🔥 கோயில் பிரசாத வகைகளை கொள்முதல் செய்ய மாவட்ட அரசு தலைமை சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுக்களை மாவட்டம்தோறும் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

🔥 கோயில்களில் உள்ள யானை,குதிரை,பசு உள்ளிட்ட விலங்குகளை பராமரிக்க மாவட்ட கால்நடைத் துறை மற்றும் மாவட்ட வனத்துறை ஆகியோரை துணை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

🔥 கோயில் தெப்ப குளங்கள், தீர்த்ங்கள் ஆகியவற்றை பராமரிக்க மத்திய தொல்லியல் துறையும்,மத்திய பொதுப்பணி துறையும் இணைந்து குழுக்கள் அமைக்க வேண்டும்.

100 வருட பழமையான கோயில்களை தொல்லியல் துறைக்கு கொடுக்கக் கூடாது என்று கூட்டு சதி செய்து வந்த பல கும்பல்கள், ஷீலா பாலாஜி இந்த தீர்ப்பு வந்த உடன் அந்தர்பல்டி அடித்து ஊருக்காக நல்ல பிள்ளை வேஷம் பொன். மாணிக்கவேலுக்காக போட்டது போல தற்போதும் போடத் துவங்கி விட்டனர்.

வழக்கம் போல ஜாதிப் பிரச்சனையை தூண்டி இந்த மகத்தான தீர்ப்பை அமுக்க களம் இறக்கப்பட்டு உள்ளது.

இதை அமுக்க துணைக்கு பலர் ஓடத் தொடங்கி உள்ளது தமிழக மக்களிடம் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பின் குறிப்பு:

தற்போது 80 வருடமே ஆன பேரூர் ஆதீனத்தில் தி.க கருப்பு சட்டைகளின் ஒருங்கிணைப்பில் பெண் அர்ச்கர்கள் பண்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கு ஆள் பிடிக்க கிராமம் தோறும் கோயில்லோ அர்ச்சக பணி ட்ரெயினிங்குகூவி கூவி அழைத்து வருகிறார்கள்.

இவர்களைதான் பேரூர் ஆதீனத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்து தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்ய வைக்கப் போகிறார்களாம்.

சிலை கடத்தல் பேர்வழிகள் திடீர் என தீண்டாமை ஒழிக்க ஓடும் கதை இதுதான் மக்களே.

கொரோனா காலத்தில் ஜாதி வெறுப்பை ஏற்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க உயர் நீதிமன்ற தீர்ப்பை முடக்கத்தான் இந்தடிராமா.

இதற்காகதான் கோயிலை பூட்டி வைத்து டிராமாக்கள் நடைபெறுகிறது.

துருக்கர் காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்களைவிட இன்று மறைமுக போகிகளான நாத்திகவாதிகள் இடிப்பவைதான் அதிகம்.

உங்கள் கோயில்களை ஆகம முறைப்படி பழமை மாறாமல் புதுக்க, தொல்பொருள் துறையின் ரிட்டயர்ட் ஆபீசர்கள் NGO ஒன்று நடத்தி வருகின்றனர்:
http://conserveheritage.org/


கோவில்கள் சிறப்பானவை. அதனை ஆகமவிதிப்படி உருவாக்கியிருந்தால் அதன் சிறப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகமவிதி என்பது, கோவிலகள் அமைக்கும் முறைகளை, விதிகளை கூறுகிறது. அதனையொத்து கட்டப்படும் கோவில்களில் மென்மேலும் மெருகு கூடுகிறது. கோவில்களை எப்படிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பை தேர்ந்தெடுப்பது, ஆலயங்களின் அளவு-அமைப்புகள், பூஜை விதிகள், அதற்கான காலங்கள், முதலியவை எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கோவிகள் கட்டுவதற்கு ஏற்ற இடம் அமைவதற்கு பல இடங்களில் "பூ(bhoo) பரிட்சை" நடத்தபட்டு, அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. 'வாமதேவ பத்ததி'யை முன்னிருத்தி செய்வதாக கூறப்படுகிறது. இது சைவர்களின் 'சிவ-ஆகமம்'. (வைணவர்களுக்கு முறையே, 'வைகானசம், பஞ்சராத்ரம்' என்ற விதிமுறைகள் உள்ளன.)

சிவலிங்கத்தை மூன்று அங்கங்களாக பிரிக்கலாம். விஷ்ணு பாகம், ருத்ர பாகம், மற்றும் ஆவுடையாரில் தேவி பூஜிக்கப்படுகிறாள். ஆலயங்களில் பிரதிஷ்டை பல சமயங்களில் செய்யப்படுகின்றது.

ஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது

அனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை

புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது

அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை

சில ஆலயங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், தொன்று தொட்டு நிலவி வருவதன் காரணமும், ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.


Source: http://minminipoochchigal.blogspot.com/2009/12/part1_2645.html

மேலும் கொங்கதேசம் குறித்த ஒரு தகவல் களஞ்சியம்: kongureligion.blogspot.com

Thursday, February 3, 2011

நிர்மூலமாக்கப்படும் கோவில்கள் - முதலாவது - காளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் (ஈரோடு)


தாயே பராசக்தி! குலவிளக்காயியே துணை!
எல்லாம் உன்னால் நடந்தது! எல்லாம் உன்னால் நடக்கிறது!
எங்களுக்கு நீயே வழிகாட்டி!

              காளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் கொங்க வெள்ளாள கவுண்டர்களில் கன்ன கோத்திர மக்களுக்கு காணி தெய்வமாக விளங்கி வருகிறார். காவிரிக்கரையில் வடக்கே பார்த்த படி சம்கார மூர்த்தியாக கட்சி தருகிறாள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கன்னிவாடியிலிருந்து வந்த கன்ன கோத்திரத்தாரால் புணரமைக்கப்பட்டு வேத, சிற்ப, கணித, ஆகம முறைகளுடன் முக்கால பூஜையுடன் வழிபடப்பட்டு வருகிறது.

     பெரியோர்களால் இத்தனை நூற்றாண்டுகளாக பக்தி சிரத்தையுடன் இருந்து  வந்தது.  தற்போது கோவிலின் சிற்ப, கணித, வேத, ஆகம  முறைகளை சிதைந்து கொண்டிருக்கிறது. மேலும் கோவில்களில் நடந்துள்ள சிதைபாடுகளை பின்னே பதிப்பித்துள்ளோம்.  





 வாகனம் அகற்றப்பட்டு அலுமினிய கூரை போடப்பட்ட கோவிலின் மேற்கு வளாகம். இப்போது இங்குதான் திருமணங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.



  கோவிலுக்கு கிழக்கு புறமாக நல்லத்தால் கோவிலுக்கு வடக்குபுறமாக இருந்த அம்பாளின் வாகனங்கள் (2008 )

 அம்பாளின் வாகனங்கள் தூக்கப்பட்டு வெண்கல குதிரையை வைத்து பாவலா காட்டுகின்றனர்


 வடக்கு கோபுர வாயில்  (1965)

 வடக்கு கோபுர வாயில் (2008)

வடக்கு கோபுர வாயில் கான்க்ரிட்டால் சூழப்பட்டு சிதைப்பட்டுள்ளது (2010)


கோவில் வடக்கு முகப்பு (1965)


 வடக்கு முகப்பு தற்போது 

 கொடிமரம் (2008)


பழைய  கொடிமரம் அகத்ற்றப்பட்டு  கான்க்ரிட்டால் சூழப்பட்டுள்ள புதிய கொடிமரம்

  

மேல்கண்ட பாடலில் கடைசி 6 வரிகள்:-
“கணிதத்தையும், சிற்பம், வேதம், ஆகமம் முறையெல்லாம் கற்று தேர்ந்தவரும் மறையை (வேதத்தை) உரைக்கும் மெய்ஞான குருதேசிகர் வந்து அவர் சொன்னபடி கும்பாபிடேகம் தப்பேதும் வராமல் நடத்தினாரே!”


Wednesday, February 2, 2011

கோயில் ஜிஹாத்

 எதோ என்னமோ என்று நினைக்க வேண்டாம். நீங்கள் கோயில் புணருத்தாரனம் என்று கொடுக்கும் பணமெல்லாம் அக்கோயில்களின் பழமையையும் சான்னித்தியத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் ஜிஹாதைவிட இந்த ஜிஹாத் ஊர்தோறும் நடந்து வருகிறது.


Frequently asked questions (FAQs):

1. கோயில் பழசாயிட்டுதே! பழைய கோயிலை புதுக்குவதுன்னா, பழமை மாறாமல் அதனை repair செய்வது. அதைவிட்டுவிட்டு இடித்துத்தள்ளிவிட்டு  புது கோயில் கட்டுவதல்ல. பழசை இடிப்பதினால் முன்னோர்களின் சாபமும், பழைய சான்னித்தியமும் காணாமல் போவதோடு அகால மரணங்கள் ஏற்படும் என்பது கண்கூடு. கோயிலை இடித்து கட்டிவிட்டு...ஐயையோ ஆண்டவனே கோயில் வேலையெல்லாம் செய்தாரே இப்படி ஆயிட்டுதே! high dramaவெல்லாம் வேண்டாம். Reach foundation
 என்று ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு உங்கள் உதவிக்கு உள்ளது.  (ஏனுங்கோ...பழசானாத்தானே கோயிலுக்கு மருவாதை?!?)


2. பக்தர்களுக்கு வசதி செய்து தர்றேன்...ஹி....ஹி...ஹிகோ+இல் = கோயில்...சாமி வீடு. ஆகம பிரகாரம்தான் அச்சு பிசகாமல் இருக்கணும்... யார் வீட்ட யார் வசதிக்காக யார் மாத்துறது?  முன்னோர்களுக்குத் தெரியும் என்ன வசதி  செய்யணும்..எது வேண்டாம்னு. கோயில் சாமி வீடு. கல்யாண மண்டபமல்ல. உதாரணமாக கல்யாணப்பெண்ணுக்குப் periods என்றால் உள்ளே போகக்கூடாதல்லவா! கல்யாணம் பண்ண வேண்டியது உங்கள் "இல்"இல். சாமி "இல்"இல் அல்ல. பழைய முறைமைகளை செய்யாமல் விடுவதுதான் தவறு. புதுமைகளைப் புகுத்துவதும் தவறு. ஒழுங்காக ஒரு உள்ளூர் நாட்டு மாடு கோ+ இல் = உள்ளூர் நாட்டுமாட்டுவீடு என்றும் பொருள். நல்ல மாடுகளை வாங்கி அவற்றை அன்பாக அனைவரும் பராமரித்து கட்டாமல் பட்டியிட்டு அமைத்து பராமரித்தால்தான், கோயில் என்ற ஆத்ம விஞ்ஞானக் கூடத்திற்குத்தேவையான இடுபொருட்களான விபூதி, பஞ்சகவ்யம், நெய், தயிர், பால், சாணம், கோஜலம், மோர் ஆகியவை கிட்டும். இவற்றைப் பிரசாதமாக விநியோகித்தாலதான் ஊரில் நோய்நொடி இருக்காது. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது, "temple இல்லாத ஊரில்" என்று பொருளல்ல "பசுவீடு இல்லாத ஊரில்" என்று உள்ளார்ந்த பொருள். விபூதி என்ற பேரில் பாறைப்பொடி, குங்குமம் என்ற பேரில் red dyes, சந்தனம் என்ற பேரில் மரத்தூள், தேன் என்ற பேரில் சக்கரைத்தண்ணி....இதுதானாடா உங்கள் "பக்தர்கள்களுக்கு வசதி மண்ணாங்கட்டி?". ஆனா செவுத்துக்கு கிரானைட், சாமி கண்ணுமேலயே அடிக்கும் போகஸ் லைட் போன்ற கண்றாவிகளுக்கு கொறச்சலில்ல. அனைத்து பக்தர்களும் சற்றுநேரமவது டீவி என்ற மாயலோகத்தில் மதியிழப்பதற்குப் பதில், கோபரிபாலனத்தைப் போட்டிபோட்டுக்கொண்டு முறைவைத்து செய்யவேண்டும். அலுங்காமல், குலுங்காமல் செலுத்தப்படுவது பக்தியல்ல! அது தமோகுணத்தின் வெளிப்பாடே! அதேபோல் வயதான மாடுகள் விற்கப்படலாகாது. அவை விபூதி, அர்க்கம் தயாரிக்கப் பயன்படும்.


  நாட்டுப்பசுவினைக் கொல்வது, கொல்லும் வீணர்களுக்கு விற்பது, கொன்ற பசுக்கள் பொருட்களை (பெல்ட், பர்ஸ், ஷூ, பேக், டாலோ – இன்று பல ஹோட்டல்களில் நெய்க்குப்பதிலாக பயன்படுத்தப்படும் பசுக்கொழுப்பு) விற்பது, வாங்குவது ஆகியவை கோஹத்தி எனும் மஹாபாதகமாகும். இதனைச் செய்தாரது குடும்பங்கள் படிப்படியாக க்ஷீணப்படும் என்பது நிதர்சனம். பசு, காளைகள் எக்காரணம்கொண்டும் விற்கப்படலாகாது. அதிகமானால் பிறகோயில்களுக்கோ, அல்லது பக்தர்களுக்கோ அவை வழங்கப்படலாம். பசுதெய்வத்தை ஏலம் விடும் போக்கிரித்தனம் ஆகவே ஆகாது. கோயிலில் சிறிது நேரம் தெய்வீகமான குழலோசை மட்டும் இசைக்கலாம். ஆயிரம் நாமம் பெற்ற அச்சுதன் கோவிந்தனே பசுக்களுக்காக குழலிசைத்தானல்லவா! மேலும் இயன்றால் பக்தர்கள் குழுவொன்றினை அமைத்து, கோயில் நிலத்தில் கோயிலில் பயன்படும் அனைத்து பொருட்களையும் உள்ளூர் நாட்டுரக பயிர் வித்துக்களையும், பசுவி்னையும்கொண்டு, இயற்கைமுறையில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யலாம் (உதாரணம்: நெல், பருப்பு வகைகள், எண்ணை வித்துகள், மஞ்சள், மூலிகைகள், சந்தனம், புளி போன்று). இவ்வாறு செய்தால் அவ்வூர் சுவர்க்கபுரியாகும் என்பதில் ஐயமில்லை! கோயில் இவ்வாறாக சனாதனமாயினால் (sustainable) ஊரும் தானாக சனாதனமாகும். அறநிலையத்துறையையே நம்பியிராமல் பக்தர்களாக இதனைச்செய்யவேண்டும். ஏனெனில் பக்தர்களே பரமனின் குழந்தைகள். HR & CE புல்லுறுவி. காசு சம்பாதிக்கும் இயந்திரம். அரசன் கோயிலைக் கட்டினான். HR & CE governmentகாரன் துப்பாக்கியக்காட்டி வசூல் பண்ணி அதைவச்சே கோயிலை இடிக்கிறான்.



 கோயில்களில் சீரியல்லைட், டியூப்லைட், ஸ்பாட்லைட் ஆகியவற்றைத்தவிர்த்து ஆகம விதிப்படி எண்ணை விளக்குகளும், கிரானைட், சிமென்ட்தளத்திற்குப்பதில் மூலிகை விருட்சங்கள், நந்தவனம், கோசாலையும், வீண் பகட்டுக்குப்பதில் கோயில் நிலங்களில் இயற்கைவிவசாய உற்பத்தி, அதன்மூலம் நித்திய அன்னதான சாலை ஆகியவை செய்தால்தான் புண்ணியம். பழைய கற்கோயில்களை இடித்துத்தள்ளிவிட்டு தாம்தூமென்று சிமெண்டில் பகட்டாகக் கோயில்கட்டாமல் உள்ளதனை உள்ளபடியே பராமரித்துக்கொண்டு மேற்கூறியவாறு செய்தால் இறைவன் பிரீதியடைவான்! ஒவ்வொரு கொயிலும் பழையவாறு ஆன்ம விஞ்ஞானக்கூடமாக வேண்டும். இது எவ்வளவு பணபலத்தாலும் முடியாது, பக்தர்களது ஆன்ம பலத்தாலும்,
பாரம்பரியத்தாலும் மட்டுமே இயலும்.


3. ஆகம முறைகள் யாருக்குத் தெரியும்? வேலையில்லாத சிலர் தாந்தோணித்தனமா ஸ்தபதி, பணிக்கர் என்று போய், தாங்கள் சொன்னதை சாதிக்காமல் விடமாட்டார்கள். இன்றிருக்கும் ஸ்தபதிகள் பாரம்பரிய ஸ்தபதிகளா?  இரண்டாவது உங்கள் பாரம்பரிய ஸ்தபதி யார்? அவர் எல்லாத்தையும் இடி, சாமி சிலையில் பிண்ணம், அதை ஆத்தில் வீசு, அப்பத்தான்  எனக்கு வருமானம்னு நினைக்கிறது காதில் விழலையா?  உங்கள் அப்பா அம்மா ஊணமாக இருந்தால் ஆத்திலதான் வீசுவீங்களா? வீசிட்டு நல்ல அப்பா அம்மா வாங்கிக்குவீங்களா? ஆகம முறைகளை அறிய உங்கள் குலகுரு, கோயில் பரம்பரை மணியம் (HR & CE போட்ட "பரம்பரை கிரம்பரை" nuisance காரைவேட்டிகளல்ல), தேர் மணியம், பூசாரி, ஸ்தானிக ஐயர், மாணிக்கத்தி, ஊர் பெரியவர்கள், காணியாளர்கள் என்று அனைவரையும் கூட்டி சபை அமைத்து குருவிடம் ஆகமங்களைக் கேட்டறிந்து செயல்படவேண்டும். குருவே தெய்வம். குருவிடம் idea கேளுங்கள்..... idea கொடுத்து சரியான்னு கேக்காதீங்க. See kongukulagurus.blogspot.com குலகுரு யாருன்னு தெரிலின்னா. இன்னொன்னு வாஸ்துவெல்லாம் கோயிலுக்குக்கிடையாது வாஸ்து கத்துக்குட்டிகளே! மனிதன் வஸிக்கும் சாஸ்திரமே வாஸ்து. ஆண்டவன் அருளுவதற்கு ஆகமமே! ஒவ்வொரு கோயிலுக்கும் பாரம்பரியம் உள்ளது. அதுபோலத்தான் செய்ய வேண்டும்.


4. யார் கோயில் வேலை செய்யலாம்? கரைவேட்டி, பொழப்பத்தவர்கள், ஜாலிக்காக செய்பவர்கள், சம்பந்தமில்லாதவர்கள் இவர்களெல்லாம் செய்தால் தவறுகள் நடந்து பல விபரீதங்கள் நடக்கும். எனவே மேலே சொன்னவர்கள்தான் இதனைச் செய்ய வேண்டும்.

அடுத்ததடவை எவனாவது கோயில்வேலை காசு வேணும்னு வந்தா........இதெல்லாம் சொல்லி இப்படி செஞ்சா காசு இல்லன்னா எங்க கோயிலை இடிக்கறயாடான்னு கேட்டு வாலை நறுக்குங்க.