தாயே பராசக்தி! குலவிளக்காயியே துணை!
எல்லாம் உன்னால் நடந்தது! எல்லாம் உன்னால் நடக்கிறது!
எங்களுக்கு நீயே வழிகாட்டி!
எல்லாம் உன்னால் நடந்தது! எல்லாம் உன்னால் நடக்கிறது!
எங்களுக்கு நீயே வழிகாட்டி!
காளமங்கலம் ஸ்ரீ குலவிளக்கம்மன் கொங்க வெள்ளாள கவுண்டர்களில் கன்ன கோத்திர மக்களுக்கு காணி தெய்வமாக விளங்கி வருகிறார். காவிரிக்கரையில் வடக்கே பார்த்த படி சம்கார மூர்த்தியாக கட்சி தருகிறாள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கன்னிவாடியிலிருந்து வந்த கன்ன கோத்திரத்தாரால் புணரமைக்கப்பட்டு வேத, சிற்ப, கணித, ஆகம முறைகளுடன் முக்கால பூஜையுடன் வழிபடப்பட்டு வருகிறது.
பெரியோர்களால் இத்தனை நூற்றாண்டுகளாக பக்தி சிரத்தையுடன் இருந்து வந்தது. தற்போது கோவிலின் சிற்ப, கணித, வேத, ஆகம முறைகளை சிதைந்து கொண்டிருக்கிறது. மேலும் கோவில்களில் நடந்துள்ள சிதைபாடுகளை பின்னே பதிப்பித்துள்ளோம்.
வாகனம் அகற்றப்பட்டு அலுமினிய கூரை போடப்பட்ட கோவிலின் மேற்கு வளாகம். இப்போது இங்குதான் திருமணங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.
கோவிலுக்கு கிழக்கு புறமாக நல்லத்தால் கோவிலுக்கு வடக்குபுறமாக இருந்த அம்பாளின் வாகனங்கள் (2008 )
அம்பாளின் வாகனங்கள் தூக்கப்பட்டு வெண்கல குதிரையை வைத்து பாவலா காட்டுகின்றனர்
வடக்கு கோபுர வாயில் (1965)
வடக்கு கோபுர வாயில் (2008)
வடக்கு கோபுர வாயில் கான்க்ரிட்டால் சூழப்பட்டு சிதைப்பட்டுள்ளது (2010)
கோவில் வடக்கு முகப்பு (1965)
வடக்கு முகப்பு தற்போது
கொடிமரம் (2008)
பழைய கொடிமரம் அகத்ற்றப்பட்டு கான்க்ரிட்டால் சூழப்பட்டுள்ள புதிய கொடிமரம்
மேல்கண்ட பாடலில் கடைசி 6 வரிகள்:-
“கணிதத்தையும், சிற்பம், வேதம், ஆகமம் முறையெல்லாம் கற்று தேர்ந்தவரும் மறையை (வேதத்தை) உரைக்கும் மெய்ஞான குருதேசிகர் வந்து அவர் சொன்னபடி கும்பாபிடேகம் தப்பேதும் வராமல் நடத்தினாரே!”
என்ன வேதம் பிராமண வேதமா?
ReplyDelete